என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாம்பரம் பகுதியில் குடோன்களாக மாற்றப்பட்ட 10 அரசு பள்ளி வகுப்பறைகள்
Byமாலை மலர்16 March 2017 10:44 AM GMT (Updated: 16 March 2017 10:44 AM GMT)
தாம்பரத்தில் 10 அரசு பள்ளி வகுப்பறைகள் குடோன்களாக மாற்றப்படுவது பொதுமக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
சென்னை:
தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் அரசு பள்ளியில் சில வகுப்பறைகளில் அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. மாணவ- மாணவிகள் வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பள்ளியின் ஒரு வகுப்பறையில் தீப்பிடித்து பொருட்கள் எரிந்தது. இன்னும் சில வகுப்பறைகளில் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
பள்ளி வகுப்பறைகள் குடோன்களாக மாற்றப்படுவது பொதுமக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிவராமன் கூறியதாவது:-
சேலையூரைபோல் இந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பல வகுப்பறைகள் குடோன்களாக மாற்றப்பட்டுள்ளன. படிப்பதற்கு வகுப்பறைகள் இல்லாமல் மாணவ- மாணவிகள் திண்டாடுகின்றனர்.
அரசு பள்ளிகளில் ஏழை மற்றும் நடத்தர வர்க்கத்து குழநதைகள்தான் படிக்கின்றன. அவர்களின் உயிரோடு விளையாடுகின்ற அரசின் செயல் கண்டனத்துக்குரியது.
உடனடியாக பொருட்களை அப்புறப்படுத்தி மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்யாவிட்டால் இலவச பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளின் பூட்டுகளை பொது மக்களுடன் சேர்ந்து உடைத்து பொருட்களை வெளியே தூக்கி வைப்போம்” என்றார்.
தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் அரசு பள்ளியில் சில வகுப்பறைகளில் அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. மாணவ- மாணவிகள் வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பள்ளியின் ஒரு வகுப்பறையில் தீப்பிடித்து பொருட்கள் எரிந்தது. இன்னும் சில வகுப்பறைகளில் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
பள்ளி வகுப்பறைகள் குடோன்களாக மாற்றப்படுவது பொதுமக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிவராமன் கூறியதாவது:-
சேலையூரைபோல் இந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பல வகுப்பறைகள் குடோன்களாக மாற்றப்பட்டுள்ளன. படிப்பதற்கு வகுப்பறைகள் இல்லாமல் மாணவ- மாணவிகள் திண்டாடுகின்றனர்.
அரசு பள்ளிகளில் ஏழை மற்றும் நடத்தர வர்க்கத்து குழநதைகள்தான் படிக்கின்றன. அவர்களின் உயிரோடு விளையாடுகின்ற அரசின் செயல் கண்டனத்துக்குரியது.
உடனடியாக பொருட்களை அப்புறப்படுத்தி மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்யாவிட்டால் இலவச பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளின் பூட்டுகளை பொது மக்களுடன் சேர்ந்து உடைத்து பொருட்களை வெளியே தூக்கி வைப்போம்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X