என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்துகிருஷ்ணன் மரணம் தொடர்பாக முழு நீதி விசாரணை நடத்தப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்
Byமாலை மலர்16 March 2017 7:55 AM GMT (Updated: 16 March 2017 7:55 AM GMT)
ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் தொடர்பாக முழு நீதி விசாரணை நடத்தப்படும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சேலம்:
டெல்லியில் இறந்த மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் இன்று சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறவும், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். பின்னர் முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு பெற்றோருக்கு ஆறுதலும் கூறினார்.
பின்னர் பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணன் மர்மமான முறையில் இறந்துள்ளார். ஹோலி பண்டிகை விடுமுறை நாளில் எல்லோரும் சாப்பிட சென்ற நேரத்தில் வெளிநாட்டு மாணவர் ஒருவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் முத்துகிருஷ்ணன் இறந்துள்ளார். இது குறித்து முழு நீதி விசாரணை நடந்து வருகிறது.
இந்த மாதிரி மரணங்கள் கடந்த 60 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது மட்டுமே நடைபெறுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவர் முத்துக்கிருஷ்ணன் இறப்பை சொந்த தம்பி இறந்தது போல கருதுகிறேன்.
பிரேத பரிசோதனை நடந்தபோது நான் கூடவே இருந்தேன். 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் இந்த பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்கள். இந்த அறிக்கையின்படி முழு நீதி விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
டெல்லியில் இறந்த மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் இன்று சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறவும், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். பின்னர் முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு பெற்றோருக்கு ஆறுதலும் கூறினார்.
பின்னர் பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணன் மர்மமான முறையில் இறந்துள்ளார். ஹோலி பண்டிகை விடுமுறை நாளில் எல்லோரும் சாப்பிட சென்ற நேரத்தில் வெளிநாட்டு மாணவர் ஒருவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் முத்துகிருஷ்ணன் இறந்துள்ளார். இது குறித்து முழு நீதி விசாரணை நடந்து வருகிறது.
இந்த மாதிரி மரணங்கள் கடந்த 60 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது மட்டுமே நடைபெறுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவர் முத்துக்கிருஷ்ணன் இறப்பை சொந்த தம்பி இறந்தது போல கருதுகிறேன்.
பிரேத பரிசோதனை நடந்தபோது நான் கூடவே இருந்தேன். 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் இந்த பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்கள். இந்த அறிக்கையின்படி முழு நீதி விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X