என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வில்லியனூர் அருகே ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே நடராஜன் நகரை சேர்ந்த வர் மணி. கட்டிட தொழி லாளி. இவரது மகன் முருகன் (வயது 24). இவர் சென்னையில் தங்கி வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் பெற்றோர் வீட் டுக்கு வந்தார்.
அப்போது தனது தாய் அமுதாவிடம் புதிதாக மினி வேன் வாங்க பணம் தருமாறு முருகன் கேட்டார். அமுதா தற்போது தன் னிடம் பணம் இல்லை என்றும் பிறகு பணம் தருவதாக கூறினார்.
இதனால் முருகன் விரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் முருகன் தனது தாயின் சேலையால் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் நடராஜன் (58). கூலி தொழிலாளி. இவருக்கு கொளஞ்சி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக நடராஜன் தன்னை யாரோ கத்தியால் குத்தி கொலை செய்ய வருவதாக தொடர்ந்து புலம்பி வந்தார்.
இதையடுத்து அவரது மனநிலையை மாற்ற நடராஜனை வில்லியனூர் சுப்பிரமணியம் சிவா நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து இருந்தனர். ஆனால், அங்கும் தன்னை யாரோ கத்தியால் குத்த வருவதாக கூறி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் உறவினர்கள் யாரும் இல்லாத போது சேலை யால் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் வில்லியனூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ் பெக்டர் சிங்காரவேலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்