search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹோலி கொண்டாட்டத்தில் கவர்னர், முதல்-அமைச்சர் பங்கேற்பு
    X

    ஹோலி கொண்டாட்டத்தில் கவர்னர், முதல்-அமைச்சர் பங்கேற்பு

    புதுவையில் முதல் முறையாக காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில் கவர்னர் கிரண்பேடி மற்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பங்கேற்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை காவல்துறை தலைமை அலுவலகத்தில் முதன் முறையாக ஹோலி கொண்டாடப்பட்டது.

    ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுவையில் வட மாநில மக்கள் அதிக அளவில் வசிக்கும் ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஹோலி கொண்டாட்டம் நடந்தது.

    வண்ணப்பொடிகளை ஒருவர் முகத்தில் ஒருவர் பூசி ஹோலியை கொண்டாடி மகிழ்ந்தனர். இதேபோல் புதுவை காவல்துறை தலைமை அலுவலகத்தில் முதல் முறையாக ஹோலி கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.

    கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், ஐ.ஜி. கண்ணன் ஜெகதீசன், கலெக்டர் சத்யேந்திரசிங், போலீஸ் சூப்பிரண்டுகள் ரக்சனா சிங், தெய்வசிகாமணி, ஆறுமுகம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.

    விழாவில் பங்கேற்றவர்களை போலீஸ் சூப்பிரண்டு ரக்சனாசிங் ஓடி, ஓடி சென்று வண்ண பொடிகளை பூசினார்.

    சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ஹோலி பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதுவை காவல்துறை தலைமை அலுவலகத்தில் முதன் முறையாக ஹோலி பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் ஜிப்மரில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. விடுதியில் தங்கி இருந்த மருத்துவ மாணவர்கள் வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசி கொண்டு சேற்றில் விழுந்து ஆடி-பாடியும் மகிழ்ந்தனர்.
    Next Story
    ×