search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருபுவனை அருகே இளம்பெண் மர்ம மரணம்
    X

    திருபுவனை அருகே இளம்பெண் மர்ம மரணம்

    திருபுவனை அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து போனார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருபுவனை:

    திருபுவனை அருகே திருவண்டார்கோவில் வாய்க்கால் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் திருமலை. இவர் உறுவையாறில் போட்டோ ஸ்டூடியோ கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது முதல் மனைவி பிரிந்து சென்று விட்டதால் சரசு (வயது38) என்ற பெண்ணை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    இதற்கிடையே சரசு இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்த சரசுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சரசுவை சிகிச்சைக்காக திருமலை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சரசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் சரசுவின் வாயில் நுரை தள்ளி இருந்ததால் மர்ம சாவு என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து திருபுவனை போலீசார் மர்மசாவு என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×