என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருபுவனை அருகே இளம்பெண் மர்ம மரணம்
திருபுவனை:
திருபுவனை அருகே திருவண்டார்கோவில் வாய்க்கால் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் திருமலை. இவர் உறுவையாறில் போட்டோ ஸ்டூடியோ கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது முதல் மனைவி பிரிந்து சென்று விட்டதால் சரசு (வயது38) என்ற பெண்ணை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இதற்கிடையே சரசு இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்த சரசுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சரசுவை சிகிச்சைக்காக திருமலை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சரசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் சரசுவின் வாயில் நுரை தள்ளி இருந்ததால் மர்ம சாவு என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து திருபுவனை போலீசார் மர்மசாவு என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்