என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் 50 பேர் கைது
Byமாலை மலர்6 March 2017 2:48 PM GMT (Updated: 6 March 2017 2:48 PM GMT)
இலவச மனைப்பட்டா கேட்டு மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவை ரோடியர்பேட்டில் 14 குடும்பங்கள் அரசு புறம்போக்கு இடத்தில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதரப்படவில்லை. அதோடு மனைப்பட்டாவும் வழங்கப்படவில்லை.
இதனால் அந்த குடும்பத்தினருக்கு வீட்டுமனைபட்டா வழங்க கோரி விடுதலைசிறுத்தை கட்சியினர் இன்று புதுவை கடலூர்சாலை ரோடியர்மில் அருகே உள்ள ரெயில்வே கேட்டில் மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த மறியல் போராட்டத்துக்கு விடுதலைசிறுத்தை கட்சியின் நகர செயலாளர் கன்னியப்பன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும், விடுதலைசிறுத்தை கட்சியயினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அந்த வழியே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
புதுவை ரோடியர்பேட்டில் 14 குடும்பங்கள் அரசு புறம்போக்கு இடத்தில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதரப்படவில்லை. அதோடு மனைப்பட்டாவும் வழங்கப்படவில்லை.
இதனால் அந்த குடும்பத்தினருக்கு வீட்டுமனைபட்டா வழங்க கோரி விடுதலைசிறுத்தை கட்சியினர் இன்று புதுவை கடலூர்சாலை ரோடியர்மில் அருகே உள்ள ரெயில்வே கேட்டில் மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த மறியல் போராட்டத்துக்கு விடுதலைசிறுத்தை கட்சியின் நகர செயலாளர் கன்னியப்பன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும், விடுதலைசிறுத்தை கட்சியயினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அந்த வழியே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X