search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூர் அருகே தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
    X

    வில்லியனூர் அருகே தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

    வில்லியனூர் அருகே மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் கூலிதொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பம் புதுநகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது50), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் ஒரு வளர்ப்பு மகனை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

    இதற்கிடையே மதுகுடிக்கும் பழக்கம் உள்ள ஆறுமுகம் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் பணம் வாங்கி மதுகுடிப்பது வழக்கம். அதுபோல் நேற்று ஆறுமுகம் வேலைக்கு செல்லாமல் மதுகுடிக்க மனைவியிடம் பணம் கேட்டார். ஆனால் முத்து லட்சுமி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் மனைவியை வீட்டை விட்டு விரட்டி விட்டு வீட்டின் உள்ளே தாழ்ப்பாழ் போட்டு கொண்டார்.

    ஆனால் வெகுநேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த முத்துலட்சுமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார். அப்போது கணவன் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலைய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருண் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×