search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவர் தைலம் வாங்கி தராத வேதனையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
    X

    கணவர் தைலம் வாங்கி தராத வேதனையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

    வில்லியனூரில் தலை வலிக்கு கணவர் தைலம் வாங்கி தராத வேதனையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர்:

    வில்லியனூர் பத்மினி நகரில் வசித்து வருபவர் இந்திரன். இவர், வட மங்கலத்தில் உள்ள தனியார் மாத்திரை தொழிற்சாலையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா (வயது 29). இவர்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது. ஒரு மகள் உள்ளார்.

    இதற்கிடைய கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். பின்னர் இருவரும் சமாதானமாகி விடுவார்கள். அதுபோல் நேற்று முன் தினமும் கணவன் - மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் சத்யா தனக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதால் கடைக்கு சென்று தைலம் வாங்கி தரும்படி கணவரிடம் வற்புறுத்தினார். ஆனால், ஞாபக மறதியில் இந்திரன் தைலம் வாங்கி தரவில்லை என தெரிகிறது.

    இதனால் கணவன் மீது கோபம் அடைந்த சத்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் அறை கதவை உள் பக்கமாக பூட்டி கொண்டார். வெகு நேரமாக அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த இந்திரன் கதவை உடைத்து பார்த்த போது சத்யா மின் விசிறியில் துப்பாட்டாவால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சத்யாவுக்கு திருமணமாகி 4 வருடமே ஆவதால் தாசில்தார் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×