என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காந்தி வீதி, பாரதி வீதியில் 5 கடைகளை உடைத்து கொள்ளை முயற்சி
புதுச்சேரி:
புதுவை காந்தி வீதி, பாரதி வீதியில் நள்ளிரவில் மர்ம மனிதர் ஒருவர் அங்குள்ள கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார்.
ஒரு செல்போன் கடை, 3 பெட்டிக்கடை, ஒரு மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஆகியவற்றுக்குள் அவர் நுழைந்திருக்கிறார். ஆனால் உள்ளே இருந்த பொருட்கள் எதுவும் திருட்டுபோனதாக தெரியவில்லை.
இந்த கடைகளில் பணம் எதுவும் இல்லை. அந்த நபர் பணத்தை திருடும் நோக்கத்துடன் உள்ளே வந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஆனால் பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளார்.
இதற்கிடையே அங்கிருந்த ஒரு கடை கண்காணிப்பு கேமராவில் வேட்டி அணிந்திருந்த மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைப்பது போன்ற காட்சி பதிவாகி இருக்கிறது. ஆனால் அவர் யார் என்று தெளிவாக தெரியவில்லை.
இன்று காலை அந்த பகுதியில் பிச்சைக்காரர் போன்ற தோற்றம் உடைய வயதான நபர் ஒருவர் சுற்றி வந்தார். அவர் தான் கடைகளின் பூட்டை உடைத்திருக்க வேண்டும் என கருதி அவரை அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்