search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கியாஸ் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
    X

    கியாஸ் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    மத்திய பாரதீய ஜனதா அரசு தொடர்ந்து கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை உயர்த்தி வருவதை கண்டித்து புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    புதுச்சேரி:

    மத்திய பாரதீய ஜனதா அரசு தொடர்ந்து கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை உயர்த்தி வருவதை கண்டித்து புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புஸ்சிவீதி சின்னமணிக்கூண்டு அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திந்கு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளரும் கேரளாவை சேர்ந்த எம்.எல்.ஏ,வுமான ஷாபி பராம் பல் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் நடுரோட்டில் விறகுஅடுப்புவைத்து சமைத்து மத்தியஅரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர், மத்தியஅரசு கியாஸ் விலையை குறைக்க வேண்டும், புதுவைஅரசுக்கு எதிராக செயல்படும் கவர்னரை திரும்பபெற வேண்டும் என கோசமிட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் தேவதாஸ், பொதுச்செயலாளர் சிவசாமி, செயலாளர்கள் கருணாநிதி, திருமுருகன், குமரன், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர், ரகுமான், ஜய்யப்பன், இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் சரவணன், பொதுச்செயலாளர் செந்தில், காமராஜர்நகர் தொகுதி வட்டார காங்கிரஸ் செயலாளர் வினோத், ஜான், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×