என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த 600 முரட்டுக்காளைகள்
ஆத்தூர்:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதால் பாரம்பரியமாக நடைபெறும் கிராமங்களில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் பெரியமுத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது.
இதில் 600 காளைகள் தேனி, மதுரை, மேலூர், நத்தம், திண்டுக்கல், கொசவபட்டி, திருச்சி, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்றன.
220 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். மாடுகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு மஞ்சள்நிற பனியன் வழங்கப்பட்டது.
வாடிவாசல் வழியாக கோவில் காளையை தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக சீறிப்பாய்ந்தன. இதனை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு பீரோ, கட்டில்,மெத்தை, சைக்கிள், அண்டா, தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் பரிசாக வழங்கப்பட்டது.
பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்