search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகைக்கடையில் 4.5 கிலோ தங்கம் கொள்ளை: கத்தி முனையில் கொள்ளையர்கள் அட்டூழியம்
    X

    நகைக்கடையில் 4.5 கிலோ தங்கம் கொள்ளை: கத்தி முனையில் கொள்ளையர்கள் அட்டூழியம்

    நகைக்கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி 4.5 கிலோ தங்கத்தை 3 பேர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம், கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கோயமுத்தூர்:

    கோவை ராஜவீதி தெருவில் உள்ள நகைக்கடை ஒன்றில் 4.5 கிலோ எடையுள்ள தங்கத்தை 3 பேர் கொண்ட கும்பல் இன்று கொள்ளையடித்துச் சென்றனர். கடையின் வாகன ஓட்டுனருடன் சேர்ந்து மேலும் 2 பேர் கடையில் உள்ள ஊழியர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடித்துள்ளனர்.

    தகவலறிந்து நகைக்கடைக்கு விரைந்து வந்த கோவை போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடையின் வாகன ஓட்டுனர் ரியாசுதீன் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

    கொள்ளையர்கள் கத்தி முனையில் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×