search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் பிளஸ்-2 தேர்வை 15 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்
    X

    புதுவையில் பிளஸ்-2 தேர்வை 15 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்

    புதுவை மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வை 53 அரசு மற்றும் 82 தனியார் பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 659 மாணவர்கள் எழுதுகின்றனர்.
    புதுச்சேரி:

    பிளஸ்-2 தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.

    புதுவை மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வை 53 அரசு மற்றும் 82 தனியார் பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 659 மாணவர்கள் எழுதுகின்றனர். இதில், புதுவையில் மட்டும் அரசு பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 383 மாணவர்களும், தனியார் பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 834 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

    காரைக்கால் பிராந்தியத்தில் 2 ஆயிரத்து 442 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களுக்குள் மாணவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும் மின்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.

    தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடுகள் செய்வோரை கண்காணிக்க கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் தலைமையில் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×