search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: தஞ்சையில் மாணவர்கள் போராட்டம்
    X

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: தஞ்சையில் மாணவர்கள் போராட்டம்

    ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தஞ்சையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



    அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 13-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்களும் களத்தில் குதித்து உள்ளனர்.

    நேற்று திருவாரூர், மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சையில் இன்று மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தஞ்சை மன்னர் சரபோஜி அரசுகலைக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் அவர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க செயலாளர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

    இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×