என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராணிப்பேட்டையில் மயானக்கொள்ளை விழாவுக்கு வந்த மாணவன் பாலாற்றில் மூழ்கி பலி
வாலாஜா:
ராணிப்பேட்டை பாறை தெருவை சேர்ந்தவர் அப்துல்வகாப், ராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டர் அருகில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷகிலா, தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். 3-வது மகன் நாசர் (வயது 15) ராணிப்பேட்டையில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை ராணிப்பேட்டை பாலாற்றில் நடைபெற்ற மயானக்கொள்ளை விழாவை காண நாசர் பாலாற்றுக்கு வந்தான்.
அங்கு நண்பர்கள் சிலரோடு பாலாற்றில் உள்ள நீரில் இறங்கி நாசர் விளையாடி உள்ளான். அப்போது திடீரென நீரில் ஆழமான பகுதியில் மூழ்கி மூச்சுத் திணறி நாசர் பரிதாபமாக இறந்தான்.
உடனடியாக நண்பர்கள் கூச்சல் போட்டு அலறினர். இதை பார்த்த பாலாற்றில் கூடியிருந்த கூட்டத்தில் இருந்த பொதுமக்களில் சிலர் பாலாற்று நீரில் மூழ்கிய நாசரின் உடலை மீட்டனர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்