என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர்-மாமனார் மீது புகார்
Byமாலை மலர்26 Feb 2017 5:09 PM GMT (Updated: 26 Feb 2017 5:09 PM GMT)
திருவள்ளூர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமை செய்த கணவர்-மாமனார் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (28). இவருக்கும் திருநின்றவூரை சேர்ந்த நதியா(24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது நதியா 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் வரதட்சணையாக கொண்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு நதியாவை அவரது கணவர் சுரேஷ், மாமனார் கிருஷ்ணன், நாத்தனார் பிரபாவதி ஆகியோர் கொடுமை செய்தனர்.
இது குறித்து நதியா திருவள்ளூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரனிடம் புகார் செய்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து திருவள்ளூர் மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
திருவள்ளூரை அடுத்த நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (28). இவருக்கும் திருநின்றவூரை சேர்ந்த நதியா(24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது நதியா 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் வரதட்சணையாக கொண்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு நதியாவை அவரது கணவர் சுரேஷ், மாமனார் கிருஷ்ணன், நாத்தனார் பிரபாவதி ஆகியோர் கொடுமை செய்தனர்.
இது குறித்து நதியா திருவள்ளூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரனிடம் புகார் செய்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து திருவள்ளூர் மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X