search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர்-மாமனார் மீது புகார்
    X

    திருவள்ளூர் அருகே இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர்-மாமனார் மீது புகார்

    திருவள்ளூர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமை செய்த கணவர்-மாமனார் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (28). இவருக்கும் திருநின்றவூரை சேர்ந்த நதியா(24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது நதியா 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் வரதட்சணையாக கொண்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு நதியாவை அவரது கணவர் சுரேஷ், மாமனார் கிருஷ்ணன், நாத்தனார் பிரபாவதி ஆகியோர் கொடுமை செய்தனர்.

    இது குறித்து நதியா திருவள்ளூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரனிடம்  புகார் செய்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அவர்  உத்தரவிட்டார்.

    இதையடுத்து திருவள்ளூர் மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
    Next Story
    ×