search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுவாசல் போராட்டக் குழுவினர் மார்ச் 1-ம் தேதி முதல்வருடன் சந்திப்பு
    X

    நெடுவாசல் போராட்டக் குழுவினர் மார்ச் 1-ம் தேதி முதல்வருடன் சந்திப்பு

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் குழுவினர் வரும் மார்ச் 1-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச உள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட சில பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அப்பகுதிகளில் பெருமளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. நெடுவாசலில் மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



    இந்நிலையில், போராட்டக்குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச அனுமதி கோரியிருந்தனர். ஆனால், பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் இன்று டெல்லி புறப்பட்டுவிட்டதால், வரும் மார்ச் 1-ம் தேதி போராட்டக் குழுவினர் முதல்வரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அப்போது, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு முதல்வரை போராட்டக் குழுவினர் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×