என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை கொலை: வாலிபர் கைது
Byமாலை மலர்24 Feb 2017 5:49 PM GMT (Updated: 24 Feb 2017 5:49 PM GMT)
குடி போதையில் ஏற்பட்ட தகராறில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வாலிபரை கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம் 3ம்சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையன். இவரது மகன் காளிமுத்து (வயது33). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடக்க இருந்தது.
இந்நிலையில் காளிமுத்து தன் சித்தப்பா ஜெகநாதன் மகன் அசோகன் (30) என்பவருடன் கடந்த 17-ந்தேதி கிராமத்தில் உள்ள ஆற்றங்கரைக்கு சென்று மதகில் உட்கார்ந்து மது குடித்தபோது காளிமுத்துவை பாம்பு கடித்துள்ளது. இதைப்பார்த்த அசோகன் பாம்பை அடித்து கொன்று விட்டு காளிமுத்துவை வீட்டில் விட்டுவிட்டு நடந்த விபரத்தை தெரிவித்தார்.
இதனால் காளிமுத்து வீட்டில் உள்ளவர்கள் அசோகனை தரக்குறைவாக திட்டியதால் அவரும் பதிலுக்கு திட்டியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட காளிமுத்துவை அசோகன் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து நாகை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட காளிமுத்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்து பாம்பு கடித்து இறந்ததாக கருதி விசாரித்தனர். இந்நிலையில் காளிமுத்து உடலை பரிசோதனை செய்ததில் தலையில் ஏற்பட்ட காயத்தால் அவர் இறந்திருக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) பாலகுமார் கொடுத்த புகாரின் பேரில் வாய்மேடு போலீசார் கொலை வழக்காக மாற்றி அசோகனை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம் 3ம்சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையன். இவரது மகன் காளிமுத்து (வயது33). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடக்க இருந்தது.
இந்நிலையில் காளிமுத்து தன் சித்தப்பா ஜெகநாதன் மகன் அசோகன் (30) என்பவருடன் கடந்த 17-ந்தேதி கிராமத்தில் உள்ள ஆற்றங்கரைக்கு சென்று மதகில் உட்கார்ந்து மது குடித்தபோது காளிமுத்துவை பாம்பு கடித்துள்ளது. இதைப்பார்த்த அசோகன் பாம்பை அடித்து கொன்று விட்டு காளிமுத்துவை வீட்டில் விட்டுவிட்டு நடந்த விபரத்தை தெரிவித்தார்.
இதனால் காளிமுத்து வீட்டில் உள்ளவர்கள் அசோகனை தரக்குறைவாக திட்டியதால் அவரும் பதிலுக்கு திட்டியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட காளிமுத்துவை அசோகன் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து நாகை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட காளிமுத்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்து பாம்பு கடித்து இறந்ததாக கருதி விசாரித்தனர். இந்நிலையில் காளிமுத்து உடலை பரிசோதனை செய்ததில் தலையில் ஏற்பட்ட காயத்தால் அவர் இறந்திருக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) பாலகுமார் கொடுத்த புகாரின் பேரில் வாய்மேடு போலீசார் கொலை வழக்காக மாற்றி அசோகனை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X