search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி: மதுரை ஐகோர்ட்டு
    X

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி: மதுரை ஐகோர்ட்டு

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    மதுரை:

    கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது

    புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் தேவநாகரி எழுத்துக்கள் உள்ளன. நோட்டில் இதனை அச்சிட்ட பாராளுமன்றத்தில் ஓப்புதல் பெற வேண்டும். ஆனால் மத்திய அரசு ஓப்புதல் பெறாமல் புதிய நோட்டுகளை வெளியிட்டுள்ளது. எனவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த தி.மு.க.பிரமுகர் அக்ரி கணேசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இதுதொடர்பாக ஏற்கனவே மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், கலையரசன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுபோன்ற வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.


    எனவே இந்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு கிளை விசாரிக்க உகந்தது அல்ல என கூறி, நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    Next Story
    ×