என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க - ஓ.பன்னீர் செல்வம் பேச்சு
Byமாலை மலர்24 Feb 2017 9:39 AM GMT (Updated: 24 Feb 2017 9:39 AM GMT)
121 எம்.எல்.ஏ.க்களை தவிர அனைத்து தொண்டர்களும் தங்களுடன் இருக்கிறார்கள் என ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை ஆர்.கே.நகரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவின் போது ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்கள் நாங்கள் தான். 121 எம்.எல்.ஏ.க்கள் தவிர அனைத்து தொண்டர்களும் எங்கள் பக்கமே இருக்கின்றனர். எனவே, எங்கள் அணியே உண்மையான அ.தி.மு.க. மேலும், கட்சி விதிகளின் படி அனைத்து தொண்டர்களும் சேர்ந்து தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது சட்டப்படி செல்லாது. பொதுச் செயலாளராக சசிகலா போட்ட உத்தரவுகளும் செல்லாது.
கட்சி விதிகளின் படி பொதுச் செயலாளர் தேர்வு செய்யும் வரை ஜெயலலிதாவே பொதுச் செயலாளராக இருப்பார். நாங்கள் தான் நிர்வாகிகளாக தொடர்வோம். குடும்பத்தின் ஆதிக்கம் கட்சியிலும் ஆட்சியிலும் கூடாது என்பதற்காகத்தான் அதிமுக உருவாக்கப்பட்டது. அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத தினகரன் எப்படி துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க முடியும். அவர் எனக்கு கட்சியில் சேர அழைப்பு விடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. விரைவில் கட்சியின் அலுவலகம் தானாக எங்களுக்கு வந்து சேரும்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக மக்களுக்கு சந்தேகங்கள் வரத் தொடங்கின. எனவே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொண்டேன். ஜெயலலிதா மீது மதிப்பு இருந்தால் நீதி விசாரணை நடத்த வேண்டும், அதுவும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நீதி விசாரணை வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியே வரும். நான் கட்சித் தலைமையை ஏற்க வேண்டும் என்று ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் உள்ளத்தில் உள்ளதை கூறியுள்ளார். அது அவரது சொந்தக் கருத்து.
இவ்வாறு தெரிவித்தார்.
சென்னை ஆர்.கே.நகரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவின் போது ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்கள் நாங்கள் தான். 121 எம்.எல்.ஏ.க்கள் தவிர அனைத்து தொண்டர்களும் எங்கள் பக்கமே இருக்கின்றனர். எனவே, எங்கள் அணியே உண்மையான அ.தி.மு.க. மேலும், கட்சி விதிகளின் படி அனைத்து தொண்டர்களும் சேர்ந்து தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது சட்டப்படி செல்லாது. பொதுச் செயலாளராக சசிகலா போட்ட உத்தரவுகளும் செல்லாது.
கட்சி விதிகளின் படி பொதுச் செயலாளர் தேர்வு செய்யும் வரை ஜெயலலிதாவே பொதுச் செயலாளராக இருப்பார். நாங்கள் தான் நிர்வாகிகளாக தொடர்வோம். குடும்பத்தின் ஆதிக்கம் கட்சியிலும் ஆட்சியிலும் கூடாது என்பதற்காகத்தான் அதிமுக உருவாக்கப்பட்டது. அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத தினகரன் எப்படி துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க முடியும். அவர் எனக்கு கட்சியில் சேர அழைப்பு விடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. விரைவில் கட்சியின் அலுவலகம் தானாக எங்களுக்கு வந்து சேரும்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக மக்களுக்கு சந்தேகங்கள் வரத் தொடங்கின. எனவே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொண்டேன். ஜெயலலிதா மீது மதிப்பு இருந்தால் நீதி விசாரணை நடத்த வேண்டும், அதுவும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நீதி விசாரணை வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியே வரும். நான் கட்சித் தலைமையை ஏற்க வேண்டும் என்று ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் உள்ளத்தில் உள்ளதை கூறியுள்ளார். அது அவரது சொந்தக் கருத்து.
இவ்வாறு தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X