என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அரக்கோணத்தில் நிதி நிறுவன உரிமையாளருக்கு கத்திக்குத்து
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே அம்பரிஷபுரம் கிராமம், யாதவர் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம் என்கிற வெங்கடேசன் (வயது 50). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று அரக்கோணம் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் பணத்தை வசூல் செய்வதற்காக வெங்கடேசன் சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் வெங்கடேசனிடம் கடனுக்கு பணம் கேட்டு உள்ளார்.
வெங்கடேசன் பணம் கொடுக்க மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேசனை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். உடனே அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசினர் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்