search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியகுளம் அருகே கடன் தொல்லையால் 2 குழந்தைகளுடன் மாயமான பெண்
    X

    பெரியகுளம் அருகே கடன் தொல்லையால் 2 குழந்தைகளுடன் மாயமான பெண்

    பெரியகுளம் அருகே கடன் தொல்லையால் 2 குழந்தைகளுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் தில்லைநடராஜன். இவரது மகள் சண்முக வள்ளிக்கும் (வயது 25). பெத்தனசாமி என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரகாஷ் (6), கோகுல் (5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    பெத்தனசாமி குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு கடன் தொல்லைகள் அதிகமாக இருந்தது. இதனால் சண்முக வள்ளி கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரு குழந்தைகளுடன் தனது தந்தை வீட்டுக்கு வந்து விட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சண்முக வள்ளி திடீரென மாயமானார். 2 குழந்தைகளும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை தில்லை நடராஜன் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 2 குழந்தைகளுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×