என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் வாலிபர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை
Byமாலை மலர்21 Feb 2017 2:15 PM GMT (Updated: 21 Feb 2017 2:15 PM GMT)
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர் சாக்கடையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் பீங்கான் ஆபீஸ் என்ற அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தையொட்டி உள்ள சாக்கடையில் இன்று அதிகாலையில் சுமார் 35 வயது மதிக்கத் தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து வாலிபர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்பு உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாக்கடைக்குள் இறந்து கிடந்த அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. உடலில் சிராய்ப்பு காயங்கள் இருந்தன.
அந்த வாலிபர் சாக்கடையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அடித்துக்கொலை செய்து விட்டு உடலை சாக்கடையில் வீசிச்சென்றார்களா? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வாலிபர் நடிகர் விஜய் படம் போடப்பட்டிருந்த டீ-சர்ட் அணிந்திருந்தார். ஆகவே அவர் விஜய் ரசிகரா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் பீங்கான் ஆபீஸ் என்ற அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தையொட்டி உள்ள சாக்கடையில் இன்று அதிகாலையில் சுமார் 35 வயது மதிக்கத் தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து வாலிபர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்பு உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாக்கடைக்குள் இறந்து கிடந்த அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. உடலில் சிராய்ப்பு காயங்கள் இருந்தன.
அந்த வாலிபர் சாக்கடையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அடித்துக்கொலை செய்து விட்டு உடலை சாக்கடையில் வீசிச்சென்றார்களா? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வாலிபர் நடிகர் விஜய் படம் போடப்பட்டிருந்த டீ-சர்ட் அணிந்திருந்தார். ஆகவே அவர் விஜய் ரசிகரா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X