search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ வீடு, அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு
    X

    ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ வீடு, அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

    அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பாக ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ வீடு மற்றும் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் இன்றுவரை தமிழகத்தில் பெரும் பரபரப்பான சூழலே காணப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எதிர்கட்சியினரை வெளியேற்றிவிட்டு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆதரவாளர்கள், எதிர்கட்சியினர் மற்றும் வாக்காளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் எம்.எல்.ஏ ராமஜெயலிங்கத்தின் மனைவி தேன்மொழிக்கு போன் மூலம் மிரட்டல் வந்ததாகவும் தேன்மொழி போலீசில் புகார் அளித்துள்ளார். தற்பொழுது சட்டசபை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தபின் மீண்டும் எம்.எல்.ஏ. வீடு திரும்புவார் எனவும், அதற்காக எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம் வீடு மற்றும் அலுவலகத்துக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாவும் தெரிகிறது.
    Next Story
    ×