search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை: தீபாவுடன் இணைந்து பொதுமக்களை சந்திக்க திட்டம்?
    X

    ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை: தீபாவுடன் இணைந்து பொதுமக்களை சந்திக்க திட்டம்?

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கவர்னரை சந்தித்த பின் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். தீபாவுடன் இணைந்து பொதுமக்களை சந்திப்பது குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மதியம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். அவருடன் அவைத் தலைவர் மதுசூதனன், மைத்ரேயன் எம்.பி. செம்மலை எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் சென்றனர்.

    சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவம் குறித்து கவர்னரிடம் ஓ.பன்னீர்செல்வம் விளக்கியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கவர்னரை சந்தித்த பின் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் அவரது இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. மைத்ரேயன், மாஃபா பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை செய்தனர்.

    தற்போது உள்ள சூழ்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுடன் இணைந்து பொதுமக்களை சந்திப்பது குறித்து ஆலோசனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×