search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கவர்னருடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

    தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு கவர்னர் வித்யாசாகர் ராவுடன் முலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நேற்று தனது அமைச்சரவை மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

    இந்த தீர்மானத்தை தர்க்கல் செய்த போது சட்டசபையில் பெரும் ரகளை ஏற்பட்டது. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்தனர். இல்லையென்றால் 1 வாரம் கழித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் இதை சபாநாயகர் நிராகரித்து விட்டார்.

    அதற்கு பதில் எம்.எல். ஏக்களை எழுந்து நிற்க செய்து எண்ணிக்கை அடிப்படையில் வாக்கெடுப்பை நடத்தினார். இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்களும், எதிராக 11 எம்.எல்.ஏக்களும் எழுந்து நின்றனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து விட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

    இதையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வித்யாசாகர்ராவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

    அவருடன் அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் செங்கேட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செல்லூர் ராஜீ உள்ளிட்ட அமைச்சர்களும் உடன் சென்றிருந்தனர்.

    கவர்னருடன் சுமார் 30 நிமிட நேரம் சந்தித்து பேசிய பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
    Next Story
    ×