என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீசார் தடுத்ததால் உடலில் பட்டாசு சரத்தை சுற்றி வெடித்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்
Byமாலை மலர்15 Feb 2017 6:20 AM GMT (Updated: 15 Feb 2017 6:20 AM GMT)
போலீசார் தடுத்ததால் தனது உடலில் பட்டாசுகளை மாலையாக சுற்றி வெடித்த ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆண்டிப்பட்டி:
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட 3 பேருக்கும் தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து தேனி மாவட்டத்தின் பல இடங்களில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தனர். ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்க தமிழ்செல்வன். இவர் சசிகலாவின் ஆதரவாளராக உள்ளார்.
இதனால் ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்கதமிழ் செல்வன் ஆதரவாளர்கள் சோகத்தில் இருந்தனர். அந்த நேரத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வந்தனர்.
அப்போது அங்கிருந்த போலீசார் தடுத்து அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான சரவணன் என்பவர் தனது உடலில் சரவெடியை மாலையாக சுற்றிக் கொண்டு அதில் நெருப்பை பற்ற வைத்தார். இதைப்பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் பட்டாசை அப்புறப்படுத்தினர். இருந்தபோதும் அவர் படுகாயமடைந்தார்.
காயம் அடைந்த சரவணனை தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட 3 பேருக்கும் தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து தேனி மாவட்டத்தின் பல இடங்களில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தனர். ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்க தமிழ்செல்வன். இவர் சசிகலாவின் ஆதரவாளராக உள்ளார்.
இதனால் ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்கதமிழ் செல்வன் ஆதரவாளர்கள் சோகத்தில் இருந்தனர். அந்த நேரத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வந்தனர்.
அப்போது அங்கிருந்த போலீசார் தடுத்து அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான சரவணன் என்பவர் தனது உடலில் சரவெடியை மாலையாக சுற்றிக் கொண்டு அதில் நெருப்பை பற்ற வைத்தார். இதைப்பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் பட்டாசை அப்புறப்படுத்தினர். இருந்தபோதும் அவர் படுகாயமடைந்தார்.
காயம் அடைந்த சரவணனை தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X