search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியகுளம் அருகே மாந்தோப்பில் பெண் வெட்டி கொலை
    X

    பெரியகுளம் அருகே மாந்தோப்பில் பெண் வெட்டி கொலை

    பெரியகுளம் அருகே மாந்தோப்பில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனைவியை கணவன் வெட்டிக்கொலை செய்தார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு சொந்தமான மாந்தோப்பு சோத்துப்பாறை சாலையில் கன்னிமார் பாறை பகுதியில் உள்ளது. இங்கு உத்தமபாளையம் பண்ணைபுரத்தை சேர்ந்த பாண்டியராஜ், மனைவி கன்னீஸ்வரியுடன்(43) வேலை செய்து வருகிறார்.

    அவர்கள் தோட்டத்தில் உள்ள குடிசை வீட்டில் தங்கியுள்ளனர்.

    நேற்று கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டியராஜ் மனைவியை சரமாரியாக வெட்டினார். பலத்த காயமடைந்த கன்னீஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார். மாலையில் தோட்ட உரிமையாளர் ராமச்சந்திரன் அங்கு வந்தார். அவரிடம் பாண்டியராஜ் புலி தாக்கி தனது மனைவி இறந்ததாக தெரிவித்தார். வெட்டு காயம் இருந்ததால் சந்தேகமடைந்த ராமச்சந்திரன் அதுகுறித்து போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் அங்கு சென்று கன்னீஸ்வரியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு பெரியகுளம் அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாண்டியராஜை பிடித்து விசாரித்த போது மனைவியை வெட்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    Next Story
    ×