search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து; டிரைவர் உயிர் தப்பினார்
    X

    லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து; டிரைவர் உயிர் தப்பினார்

    அரவக்குறிச்சி அருகே பேப்பர் பண்டல்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உயிர் தப்பினார்.
    அரவக்குறிச்சி:

    ஓசூரில் இருந்து சிவகாசியை நோக்கி ஒரு லாரி பேப்பர் பண்டல்களை ஏற்றிக்கொண்டு சென்றது. லாரியை தர்மபுரியை சேர்ந்த கதிரவன்(வயது 30) என்பவர் ஓட்டிச்சென்றார்.

    லாரி நேற்று அதிகாலை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள மேட்டுப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது.

    இதில் காயம் இன்றி கதிரவன் உயிர்தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
    Next Story
    ×