search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான கப்பல்களை சிறைப்பிடிக்க உத்தரவிட ஐகோட்டு மறுப்பு
    X

    விபத்துக்குள்ளான கப்பல்களை சிறைப்பிடிக்க உத்தரவிட ஐகோட்டு மறுப்பு

    எண்ணூர் கடலில் விபத்துக்குள்ளான இரு கப்பல்களை சிறைப்பிடிக்க உத்தரவிடகோரி தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    எண்ணூர் கடலில் விபத்துக்குள்ளான இரு கப்பல்களையும் சிறை பிடித்து, முறையான இழப்பீட்டை அந்த கப்பல் நிறுவனங்களிடம் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடகோரி சென்னை ஐகோர்ட்டில் தேசிய மீனவர் நலச்சங்கம் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள், இந்த விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்று கூறினார்.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘கப்பலை சிறைப் பிடிப்பது, அந்த கப்பல் நிறுவனங்களிடம் இருந்து உரிய இழப்பீடு பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்’ என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
    Next Story
    ×