என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியரசு தினவிழா: மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள் தேசியக்கொடி ஏற்றினர்
Byமாலை மலர்26 Jan 2017 4:02 AM GMT (Updated: 26 Jan 2017 4:02 AM GMT)
குடியரசு தினத்தையொட்டி மாவட்ட தலைநகரங்களில் நடந்த விழாவில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தனர்.
சென்னை:
நாட்டின் 68-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் வீரதீர செயல் புரிந்தோருக்கான விருதுகள் உள்ளிட்ட சிறப்பு விருதுகளை வழங்கினார்.
இதேபோல் தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்தன. மதுரை, பெரம்பலூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் ஆசிரியர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதுபோன்று நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களிலும் இன்று தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி செல்வம் தேசியக்கொடி ஏற்றினார். இதேபோல் அரசியல் கட்சி அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
நாட்டின் 68-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் வீரதீர செயல் புரிந்தோருக்கான விருதுகள் உள்ளிட்ட சிறப்பு விருதுகளை வழங்கினார்.
இதேபோல் தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்தன. மதுரை, பெரம்பலூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் ஆசிரியர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதுபோன்று நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களிலும் இன்று தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி செல்வம் தேசியக்கொடி ஏற்றினார். இதேபோல் அரசியல் கட்சி அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X