என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தந்தி டி.வி. விருது பெற்று இருப்பது பாராட்டத்தக்கது - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா வாழ்த்து
Byமாலை மலர்26 Jan 2017 12:05 AM GMT (Updated: 26 Jan 2017 12:05 AM GMT)
ஊடக கடமையை உலக தமிழ் இனமே போற்றுகின்ற விதத்தில் தந்தி டி.வி. விருது பெற்று இருப்பது பாராட்டத்தக்கது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஊடக கடமையை உலக தமிழ் இனமே போற்றுகின்ற விதத்தில் தந்தி டி.வி. விருது பெற்று இருப்பது பாராட்டத்தக்கது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, தந்தி டி.வி. நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனுக்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது தேர்தலின் போது, வாக்காளர்களிடையே சிறந்த முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஊடக கடமையை உலக தமிழ் இனமே போற்றுகின்ற விதத்தில் தந்தி தொலைக்காட்சி விருது பெற்று இருப்பது பாராட்டத்தக்கது.
பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை வலிமையான கருத்துகளை கூட எளிமையான முறையில் எடுத்துரைத்து, உலக தமிழர்களின் உள்ளங்களில் “தலைப்பு செய்தியாக” என்றும் இடம் பிடித்து, தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டு தமிழர்தம் விடியலுக்கு தந்தி தொலைக்காட்சி தொடர்ந்து தொண்டாற்றி பெருமை படைத்து வருகிறது.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் ஊடக தொண்டு, அவர் கண்ட கனவு, எண்ணில்லா லட்சியம் ஆகியவற்றிற்கு, தந்தி குழுமம் தங்களது உழைப்பால் பெற்று தந்திருக்கும் நற்பெயரும், நன்மதிப்பும் என்பதாகவே நான் இதை கருதுகிறேன்.
இன்னும், இன்னும் தங்களின் வெற்றி பணிகள் தொடரட்டும், எண்ணில்லா பல விருதுகளை தந்தி தொலைக்காட்சி எதிர்காலத்திலும் பெற்று சிறக்க எனது உளமார்ந்த நல்வாழ்த்து களையும், பாராட்டுகளையும் உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.
ஊடக கடமையை உலக தமிழ் இனமே போற்றுகின்ற விதத்தில் தந்தி டி.வி. விருது பெற்று இருப்பது பாராட்டத்தக்கது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, தந்தி டி.வி. நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனுக்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது தேர்தலின் போது, வாக்காளர்களிடையே சிறந்த முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஊடக கடமையை உலக தமிழ் இனமே போற்றுகின்ற விதத்தில் தந்தி தொலைக்காட்சி விருது பெற்று இருப்பது பாராட்டத்தக்கது.
பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை வலிமையான கருத்துகளை கூட எளிமையான முறையில் எடுத்துரைத்து, உலக தமிழர்களின் உள்ளங்களில் “தலைப்பு செய்தியாக” என்றும் இடம் பிடித்து, தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டு தமிழர்தம் விடியலுக்கு தந்தி தொலைக்காட்சி தொடர்ந்து தொண்டாற்றி பெருமை படைத்து வருகிறது.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் ஊடக தொண்டு, அவர் கண்ட கனவு, எண்ணில்லா லட்சியம் ஆகியவற்றிற்கு, தந்தி குழுமம் தங்களது உழைப்பால் பெற்று தந்திருக்கும் நற்பெயரும், நன்மதிப்பும் என்பதாகவே நான் இதை கருதுகிறேன்.
இன்னும், இன்னும் தங்களின் வெற்றி பணிகள் தொடரட்டும், எண்ணில்லா பல விருதுகளை தந்தி தொலைக்காட்சி எதிர்காலத்திலும் பெற்று சிறக்க எனது உளமார்ந்த நல்வாழ்த்து களையும், பாராட்டுகளையும் உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X