என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஸ்ரீமுஷ்ணம் அருகே விவசாயி மீது தாக்குதல்
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள எம்.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராயர் (வயது 51), விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பாலகுமார் மற்றும் அவரது தம்பி விஜயன் ஆகிய 2 பேரும் ராயரின் வீட்டிற்கு சென்று தகாதவார்த்தைகளால் திட்டினர்.
இதை தட்டிக்கேட்ட ராயருக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி பாலகுமார் மற்றும் விஜயன் ஆகிய 2 பேரும் ராயரை சரமாரியாக தாக்கினர். அவரது வீட்டில் உள்ள பொருட்களையும் சூறையாடினர். தாக்குதலில் படுகாயம் அடைந்த ராயரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ராயர் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாலகுமாரை கைது செய்தனர். விஜயனை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்