search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
    X

    தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தா.பேட்டை:

    தா.பேட்டை அடுத்த பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் ஒரு பகுதியில் மட்டும் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவியதாக தெரிகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள் துறையூர் ஒன்றிய ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

    இதையடுத்து முசிறி - துறையூர் சாலையில் பொன்னுசங்கம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்த ஜெம்புநாதபுரம் போலீசார் விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்து நடவடிக்ககை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒருமணிநேரம் பஸ் போக்குவரத்து தடைபட்டது.

    Next Story
    ×