search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியாசர்பாடியில் போலீஸ் தடியடியை கண்டித்து திருநங்கைகள் போராட்டம்
    X

    வியாசர்பாடியில் போலீஸ் தடியடியை கண்டித்து திருநங்கைகள் போராட்டம்

    மெரினாவில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பஸ் நிறுத்தம் அருகே திருநங்கைகள், பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பூர்:

    ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் சென்னை மெரினா கடற்கரையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இன்று காலை போலீசார் மாணவர்களை கலைந்து போகும்படி கூறினார். ஆனால் மாணவர்கள் கலைந்து போகாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பஸ் நிறுத்தம் அருகே திருநங்கைகள், பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது திருநங்கைகள் மாணவர்கள் மீது தடியடி நடத்த கூடாது தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோ‌ஷம் போட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் திருநங்கைகள், பொதுமக்கள் என 75-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    Next Story
    ×