search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தை கைவிட மாட்டோம்: இளைஞர்கள், மாணவர்கள் திட்டவட்டம்
    X

    போராட்டத்தை கைவிட மாட்டோம்: இளைஞர்கள், மாணவர்கள் திட்டவட்டம்

    காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்க மறுத்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
    சென்னை:

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வேண்டும் விடுத்து இருந்தனர்.

    இந்நிலையில், காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்க மறுத்த இளைஞர்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

    தற்காலிக தீர்வு தங்களுக்கு வேண்டாம் என்றும் நிரந்தர தீர்வு தான் வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

    மேலும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை அறிவிக்கப்படும். அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை மெரினாவில் மட்டுமல்லாமல் மதுரை அலங்காநல்லூர், புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதே கருத்து தான் நிலவி வருகிறது. 
    Next Story
    ×