search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலைந்து செல்லுங்கள்: மெரினா போராட்டக்காரர்களுக்கு காவல்துறை வேண்டுகோள்
    X

    கலைந்து செல்லுங்கள்: மெரினா போராட்டக்காரர்களுக்கு காவல்துறை வேண்டுகோள்

    மெரினா கடற்கரையில் இருந்து போராட்டக்காரர்களை கலைந்து செல்லும் படி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
    சென்னை:

    ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களான ராஜசேகர், கார்த்திகேய சிவசேனாதிபதி, அம்பலத்தரசு, ஹிப்காப் ஆதி ஆகியோர்,  மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நேற்று நடைபெற்ற கூட்டான சந்திப்பின் போது  அவர்கள் இந்த கோரிக்கையை முன் வைத்தனர்.

    இந்நிலையில், மெரினா கடற்கரையில் இருந்து போராட்டக்காரர்களை கலைந்து செல்லும் படி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இது தொடர்பாக காவல்துறையினர், ”அமைதியான முறையில் போராடினீர்கள், அதேமுறையில் கலைந்து செல்லுங்கள். 

    போராட்டத்திற்கான குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் கலைந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க போராட்டக்காரர்கள் இதுவரை அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளித்தீர்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
    Next Story
    ×