என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு
Byமாலை மலர்22 Jan 2017 1:04 PM GMT (Updated: 22 Jan 2017 1:04 PM GMT)
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை முதல் வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டம் மிகப்பெரிய எழுச்சி பெற்றது. அத்துடன் இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.
இதனால் கடந்த சில நாட்களில் தமிழகமே ஸ்தம்பித்தது. குறிப்பாக வெள்ளிக்கிழமை அனைத்து தரப்பினரும் விடுமுறை என அறிவித்தனர். இதனால் பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த தமிழக அரசு, இன்று சில இடங்களில் ஜல்லிக்கட்டையும் நடத்தியது. நாளை சட்டமன்றத்தில் இதற்கான மசோதா நிறைவேற இருக்கிறது. இருந்தாலும் நிரந்த தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்குமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் கடந்த சில நாட்களில் தமிழகமே ஸ்தம்பித்தது. குறிப்பாக வெள்ளிக்கிழமை அனைத்து தரப்பினரும் விடுமுறை என அறிவித்தனர். இதனால் பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த தமிழக அரசு, இன்று சில இடங்களில் ஜல்லிக்கட்டையும் நடத்தியது. நாளை சட்டமன்றத்தில் இதற்கான மசோதா நிறைவேற இருக்கிறது. இருந்தாலும் நிரந்த தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்குமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X