search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு பிரச்சினை: பாராளுமன்ற மேல்-சபையில் திருச்சி சிவா தனிநபர் தீர்மானம்
    X

    ஜல்லிக்கட்டு பிரச்சினை: பாராளுமன்ற மேல்-சபையில் திருச்சி சிவா தனிநபர் தீர்மானம்

    ஜல்லிக்கட்டு பிரச்சினை குறித்து பாராளுமன்ற மேல்- சபையில் விவாதம் நடத்திட தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தனிநபர் தீர்மானம் கொடுத்துள்ளார்.
    சென்னை:

    ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு ஊர்களிலும் திரண்டிருந்த மக்கள் இன்னும் கலையாமல் உள்ளனர். நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து உள்ளனர். இதனால் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு பிரச்சினை குறித்து பாராளுமன்ற மேல்- சபையில் விவாதம் நடத்திட தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தனிநபர் தீர்மானம் கொடுத்திருந்தார்.

    இந்த தீர்மானம் அடுத்த மாதம் 9-ந்தேதி (பிப்ரவரி) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மேல்-சபை செயலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அன்றைய தினம் டெல்லி மேல்-சபையில் ஜல்லிக்கட்டு விவகாரம் பெரிய அளவில் விவாதிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
    Next Story
    ×