search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காளையை அடக்குனாதான் கல்யாணம் கட்டிக்குவேன் - களத்தில் கவனம் ஈர்த்த வாசகங்கள்
    X

    'காளையை அடக்குனாதான் கல்யாணம் கட்டிக்குவேன்' - களத்தில் கவனம் ஈர்த்த வாசகங்கள்

    'காளையை அடக்குனாதான் கல்யாணம் கட்டிக்குவேன்' என எழுதிய வாசகங்களுடன் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சிறுமி ஒருவர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
    ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என சிறு பொறியாய் எழுந்த நெருப்பு பெரும் ஜூவாலையாக மாறி இன்று உலகம் முழுவதையும் உற்று நோக்க வைத்துள்ளது.

    ஜல்லிக்கட்டு வேண்டும் என மெரினாவில் ஆரம்பித்த போராட்டம் இன்று 5-வது நாளைத் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்திட அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நாளை காலை இப்போட்டியை அலங்காநல்லூரில் தொடங்கி வைக்கப்போவதாக தமிழக முதல்வர் கூறியிருக்கிறார்.

    இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களத்தில் கவனம் ஈர்த்த வாசகங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம். களத்தில் நிற்கும் சிறுமி ஒருவர் ‘காளையை அடக்குனாதா கல்யாணம் கட்டிக்குவேன்’ என்ற பதாகையுடன் போராடி வருகிறார். இதனைப் பார்த்து இளைஞர்கள் லேசாக 'ஷாக்' ஆனாலும் இந்த வாசகத்தை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.



    மற்றொரு புகைப்படத்தில் சிறு குழந்தை ஒன்று ''என்னுடன் விளையாடி விட்டு ஜல்லிக்கட்டைத் தடை செய்'' என்று கூறுகிறது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இதுபோன்ற பிஞ்சுகளும் களத்தில் இறங்கி போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×