என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மொடக்குறிச்சி பகுதியில் தடையை மீறி சேவல் சண்டை
Byமாலை மலர்21 Jan 2017 10:08 AM GMT (Updated: 21 Jan 2017 10:08 AM GMT)
மொடக்குறிச்சி பகுதியில் தடையை மீறி சேவல் சண்டை நடைபெற்றது. இதனை 100-க்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்தனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி தாலுகாவில் மொடக்குறிச்சி, கணபதி பாளையம், எழுமாத்தூர், அவல்பூந்துறை உள்பட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி, ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள் நடைபெற்றது.
மொடக்குறிச்சியில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரிக்கை வைத்தனர்.
காளை மாட்டுடன் மொடக்குறிச்சி நால்ரோட்டில் தொடங்கி, தாலுகா அலுவலகம், மொடக்குறிச்சி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காவல் நிலையம், ஈஸ்வரன்கோவில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியாக மீண்டும் மொடக்குறிச்சி நால்ரோட்டை அடைந்து தொடர்ந்து மொடக்குறிச்சி பஸ் நிறுத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல், எழுமாத்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சமூகநல மறுமலர்ச்சி கழகம் மற்றும் இந்து முன்னணி மற்றும் எழுமாத்தூர் கிராம பொதுமக்கள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் கணபதி பாளையம் நால் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கணபதி பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கி நடைபெற்ற பேரணியில் ஜல்லிக் கட்டுகாளைகளுடன் வந்த பொதுமக்கள் இளைஞர்கள் பீட்டா அமைப்பை தடைசெய்யவேண்டும், ஜல்லிக்கட்டு தமிழர்களின் பராம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டை தடைசெய்யும் உரிமை பீட்டா அமைப்பிற்கு கிடையாது என்பன போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
தொடர்ந்து கணபதி பாளையம் நால்ரோடு பகுதியில் நடைபெற்ற சேவல்சண்டையை 100-க்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்தனர். இதேபோல் லக்காபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மொடக்குறிச்சி தாலுகாவில் மொடக்குறிச்சி, கணபதி பாளையம், எழுமாத்தூர், அவல்பூந்துறை உள்பட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி, ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள் நடைபெற்றது.
மொடக்குறிச்சியில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரிக்கை வைத்தனர்.
காளை மாட்டுடன் மொடக்குறிச்சி நால்ரோட்டில் தொடங்கி, தாலுகா அலுவலகம், மொடக்குறிச்சி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காவல் நிலையம், ஈஸ்வரன்கோவில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியாக மீண்டும் மொடக்குறிச்சி நால்ரோட்டை அடைந்து தொடர்ந்து மொடக்குறிச்சி பஸ் நிறுத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல், எழுமாத்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சமூகநல மறுமலர்ச்சி கழகம் மற்றும் இந்து முன்னணி மற்றும் எழுமாத்தூர் கிராம பொதுமக்கள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் கணபதி பாளையம் நால் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கணபதி பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கி நடைபெற்ற பேரணியில் ஜல்லிக் கட்டுகாளைகளுடன் வந்த பொதுமக்கள் இளைஞர்கள் பீட்டா அமைப்பை தடைசெய்யவேண்டும், ஜல்லிக்கட்டு தமிழர்களின் பராம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டை தடைசெய்யும் உரிமை பீட்டா அமைப்பிற்கு கிடையாது என்பன போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
தொடர்ந்து கணபதி பாளையம் நால்ரோடு பகுதியில் நடைபெற்ற சேவல்சண்டையை 100-க்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்தனர். இதேபோல் லக்காபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X