search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்றும், நாளையும் தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை இயக்குனர் பேட்டி
    X

    இன்றும், நாளையும் தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை இயக்குனர் பேட்டி

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் இன்று சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
    சென்னை:

    சென்னை வானிலை மைய இயக்குனர் ஸ்டெல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. அது மேற்கு நோக்கி நகர்ந்து தமிழகத்தை நோக்கி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும். மழையை பொறுத்தவரை அது மிதமாகத்தான் இருக்கும்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அநேக இடங்களில் மழை பெய்யும். கன மழைக்கு வாய்ப்பில்லை.

    சென்னையை பொறுத்தவரை இன்றும், நாளையும் காலையில் நகரில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். ஆனால் வானம் மேக மூட்டமாக இருக்கும். இன்றும், நாளையும் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் காற்று 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம். ஆனால் அவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×