என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனியில் மின்சாரம் தாக்கி ஓமியோபதி டாக்டர் பலி
Byமாலை மலர்20 Jan 2017 9:58 AM GMT (Updated: 20 Jan 2017 9:58 AM GMT)
பழனியில் மின்சாரம் தாக்கி ஓமியோபதி டாக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனி அடிவாரம் தெற்கு கிரிவீதி சாதுசுவாமிகள் மடம் அருகே குடியிருப்பவர் மருதுபாண்டி (வயது 65).ஓமியோபதி டாக்டர். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவியும், ரஜேஷ்வரன், கதிரேசன், நாகராஜ் என்ற 3 மகன்களும் உள்ளனர்.
நேற்று பகல் வீட்டில் இருந்த மருதுபாண்டி தரையில் அமர்ந்து மின்சார தேய்ப்பு பெட்டிமூலம் தனது துணிகளை தேய்த்துக் கொண்டிருந்தார். மின்சார தேய்ப்பு பெட்டி மிக பழையதாக இருந்ததால் தேய்த்துக் கொண்டிருந்த போது மருது பாண்டியை மின்சாரம் தாக்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து போனார்.
பிரேதபரிசேதனைக்காக மருதுபாண்டியின் உடல் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக பழனி அடிவாரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X