search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து பிரச்சனைக்கும் போராட மாணவர்கள் முடிவு
    X

    அனைத்து பிரச்சனைக்கும் போராட மாணவர்கள் முடிவு

    ஜல்லிக்கட்டை போல அனைத்து பிரச்சனைக்கும் போராட மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் இணையதளம் மூலம் ஒன்றாக இணைகிறார்கள்.
    சென்னை:

    மெரினாவில் இன்று நடந்த போராட்டத்தின் போது ஒரு முக்கிய அறிவிப்பை மாணவர்கள் வெளியிட்டனர். இளைஞர் ஒருவர் அனைத்து மாணவர்களுக்கும் கேட்கும் வகையில் அதனை அறிவித்தார்.

    இன்று சமூக ஊடகங்கள் மூலமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாம் திரண்டுள்ளோம். இனி எல்லாவிதமான தமிழர் பிரச்சனைகளுக்கும் இதுபோல் நாம் ஒன்றுபட வேண்டும்.

    அது தொடர்பாக இணையதளம் வாயிலாக நமது விருப்பங்களையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கான முகவரியான ‘டி.என்.ஸ்டூடன்ட்ஸ் ஜல்லிக்கட்டு’ என்கிற இணையதளத்தில் போய் தங்களது விருப்பங்களை பதிவு செய்யுங்கள் என்று தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்த படியே உடனடியாக தங்கள் செல்போன் மூலமாக இணையத்தில் புகுந்து விருப்பங்களை பதிவு செய்தனர்.
    Next Story
    ×