என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை
Byமாலை மலர்18 Jan 2017 5:28 PM GMT (Updated: 18 Jan 2017 5:28 PM GMT)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிப்பதாக கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்தன.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு பள்ளிகளுக்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கோவை அரசு கல்லூரிக்கும் நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அனைத்து துறைகளுக்கும் 22-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, விடுதியை விட்டு வெளியேற மாணவ, மாணவிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிப்பதாக கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்தன.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு பள்ளிகளுக்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கோவை அரசு கல்லூரிக்கும் நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அனைத்து துறைகளுக்கும் 22-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, விடுதியை விட்டு வெளியேற மாணவ, மாணவிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X