என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொங்கல் பொங்கட்டும் மகிழ்ச்சி தங்கட்டும்: சசிகலா வாழ்த்து
Byமாலை மலர்13 Jan 2017 7:40 AM GMT (Updated: 13 Jan 2017 7:40 AM GMT)
உலகத் தமிழர்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பொங்கல் திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று சசிகலா தெரிவித்தார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
உலகத் தமிழர்கள் அனைவரும் எழுச்சியுடனும், உற்சாகத்துடனும், உவகையுடனும் கொண்டாடி மகிழும் பொங்கல் திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜாதி, வேறுபாடுகளைக் களைந்து சமத்துவமும், சகோதரத்துவமும் நிறைந்து நின்று பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில், புதுநெல்லு, புதுப்பானை, கரும்பு, மஞ்சள், வாழை என விளைந்த பொருட்களை வைத்து “பொங்கலோ பொங்கல்’’ என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனையும், இயற்கையையும் வணங்கி கொண்டாடும் திருநாள் பொங்கல் பண்டிகை என்னும் நன்நாள் ஆகும்.
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை எனும் வள்ளுவப் பேராசானின் குறள் மொழிக்கேற்ப, உலகில் வாழும் மக்கள் எண்ணற்ற தொழில்கள் பல செய்து வந்த போதும், உழவுத் தொழில் தான் முதன்மையானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது.
இத்தகைய பெருமைக்கும், புகழுக்கும் உரிய உழவர் பெருமக்களின் நலனை பேணிக் காத்திடவும், உழவர்களின் பெருவாழ்வு மனமகிழ்ச்சியையும், அவர்தம் வாழ்க்கை சிறந்திடவும், இதய தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு பல்வேறு சீரிய திட்டங்களைத் தீட்டி விவசாயப் பெருமக்களைக் காத்து வருகிறது.
பொங்கல் பண்டிகையை, தமிழக மக்கள் அனைவரும் இன்புற்று கொண்டாடி மகிழ, இன்முகம் என்றும் பூத்துக் குலுங்கிட, இதய தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக மக்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பொங்கல் பொங்கட்டும் தமிழர்களின் வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சி தங்கட்டும் அதைக் கண்டு இந்த நாடே மகிழட்டும் என்று மனமார வாழ்த்தி, என் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.
இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
உலகத் தமிழர்கள் அனைவரும் எழுச்சியுடனும், உற்சாகத்துடனும், உவகையுடனும் கொண்டாடி மகிழும் பொங்கல் திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜாதி, வேறுபாடுகளைக் களைந்து சமத்துவமும், சகோதரத்துவமும் நிறைந்து நின்று பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில், புதுநெல்லு, புதுப்பானை, கரும்பு, மஞ்சள், வாழை என விளைந்த பொருட்களை வைத்து “பொங்கலோ பொங்கல்’’ என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனையும், இயற்கையையும் வணங்கி கொண்டாடும் திருநாள் பொங்கல் பண்டிகை என்னும் நன்நாள் ஆகும்.
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை எனும் வள்ளுவப் பேராசானின் குறள் மொழிக்கேற்ப, உலகில் வாழும் மக்கள் எண்ணற்ற தொழில்கள் பல செய்து வந்த போதும், உழவுத் தொழில் தான் முதன்மையானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது.
இத்தகைய பெருமைக்கும், புகழுக்கும் உரிய உழவர் பெருமக்களின் நலனை பேணிக் காத்திடவும், உழவர்களின் பெருவாழ்வு மனமகிழ்ச்சியையும், அவர்தம் வாழ்க்கை சிறந்திடவும், இதய தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு பல்வேறு சீரிய திட்டங்களைத் தீட்டி விவசாயப் பெருமக்களைக் காத்து வருகிறது.
பொங்கல் பண்டிகையை, தமிழக மக்கள் அனைவரும் இன்புற்று கொண்டாடி மகிழ, இன்முகம் என்றும் பூத்துக் குலுங்கிட, இதய தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக மக்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பொங்கல் பொங்கட்டும் தமிழர்களின் வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சி தங்கட்டும் அதைக் கண்டு இந்த நாடே மகிழட்டும் என்று மனமார வாழ்த்தி, என் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.
இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X