search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவையாறு அருகே ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் கொள்ளை
    X

    திருவையாறு அருகே ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் கொள்ளை

    திருவையாறு அருகே ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
    திருவையாறு:

    திருவையாறு அம்மன்பேட்டை மெயின் ரோட்டில் செயல்படும் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைபார்ப்பவர் ஜெயக்குமார் (வயது 52).

    இவர் மருத்துவமனை அருகிலேயே குடியிருந்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு திருப்பூந்துருத்தியில் வசித்துவரும் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று வீட்டிற்கு திரும்பிவந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர் கனகதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தஞ்சையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகையை பதிவு செய்து எடுத்து சென்றுள்ளனர்.
    Next Story
    ×