search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஜி.ஆர். சிலைக்கு 17-ந்தேதி சசிகலா மாலை அணிவிக்கிறார்
    X

    எம்.ஜி.ஆர். சிலைக்கு 17-ந்தேதி சசிகலா மாலை அணிவிக்கிறார்

    எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று அ.தி.மு.க. தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு பொதுச்செயலாளர் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 100-வது ஆண்டு பிறந்த நாளான 17-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10.45 மணிக்கு அ.தி.மு.க. தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, எம்.ஜி.ஆரின் 100-வது ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளார்.

    அதனைத் தொடர்ந்து கழக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1,00,000 ரூபாய் வீதம், மொத்தம் 1 கோடியே 4 லட்சம் ரூபாய் குடும்பநல நிதியுதவி வழங்க உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×