என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி வாட்ஸ்-அப் குழு நடத்தும் மனித சங்கிலி போராட்டம்
Byமாலை மலர்10 Jan 2017 11:29 AM GMT (Updated: 10 Jan 2017 11:29 AM GMT)
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி வரும் 12-ந்தேதி காலை 10 மணிக்கு கடற்கரை சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என வாட்ஸ்அப் குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.
புதுச்சேரி:
பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறையிலிருந்து நீக்கிய மத்திய அரசை கண்டித்தும், ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தியும் தமிழகம், புதுவையில் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுவையில் பல வாட்ஸ்-அப் குழுக்கள் இயங்கி வருகின்றன. மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் இளைஞர்களை ஒன்று திரட்டும் வகையிலும் போராட்டம் நடத்த வேண்டும் என வாட்ஸ்-அப் குழுக்களில் செய்திகள் பரிமாறப்பட்டது.
இதையடுத்து வாட்ஸ்-அப் குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டை நடத்தக்கோரியும், பொங்கல் பொது விடுமுறை என அறிவிக்க வலியுறுத்தியும் மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவெடுத்துள்ளனர்.
வரும் 12-ந்தேதி காலை 10 மணிக்கு கடற்கரை சாலையில் இந்த மனித சங்கிலி போராட்டத்தை நடத்துவது என அந்த குழுவினர் முடிவெடுத்துள்ளனர். இந்த குழுக்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழ் உணர்வுள்ள அனைவரும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வாட்ஸ்-அப் மூலம் செய்திகளை பரப்பி வருகின்றனர். இன்று பெரும்பாலான வாட்ஸ்-அப் குழுக்களில் இந்த செய்திதான் முக்கியமாக இடம்பெற்றிருந்தது.
அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாராமல் மத்திய அரசுக்கு எதிராக இந்த மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என குழுவின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறையிலிருந்து நீக்கிய மத்திய அரசை கண்டித்தும், ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தியும் தமிழகம், புதுவையில் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுவையில் பல வாட்ஸ்-அப் குழுக்கள் இயங்கி வருகின்றன. மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் இளைஞர்களை ஒன்று திரட்டும் வகையிலும் போராட்டம் நடத்த வேண்டும் என வாட்ஸ்-அப் குழுக்களில் செய்திகள் பரிமாறப்பட்டது.
இதையடுத்து வாட்ஸ்-அப் குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டை நடத்தக்கோரியும், பொங்கல் பொது விடுமுறை என அறிவிக்க வலியுறுத்தியும் மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவெடுத்துள்ளனர்.
வரும் 12-ந்தேதி காலை 10 மணிக்கு கடற்கரை சாலையில் இந்த மனித சங்கிலி போராட்டத்தை நடத்துவது என அந்த குழுவினர் முடிவெடுத்துள்ளனர். இந்த குழுக்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழ் உணர்வுள்ள அனைவரும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வாட்ஸ்-அப் மூலம் செய்திகளை பரப்பி வருகின்றனர். இன்று பெரும்பாலான வாட்ஸ்-அப் குழுக்களில் இந்த செய்திதான் முக்கியமாக இடம்பெற்றிருந்தது.
அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாராமல் மத்திய அரசுக்கு எதிராக இந்த மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என குழுவின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X