என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொங்கல் விடுமுறை ரத்து: மத்திய அரசை கண்டித்து தபால் ஊழியர்கள் போராட்டம்
Byமாலை மலர்10 Jan 2017 5:35 AM GMT (Updated: 10 Jan 2017 5:35 AM GMT)
பொங்கல் விடுமுறையை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பணிபுரியும் தபால் ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுமுறையில் செல்ல முடிவு செய்துள்ளார்கள்.
சிவகங்கை:
பொங்கல் விடுமுறையை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து வருகிற 14-ந் தேதி பொங்கலன்று தமிழகத்தில் பணிபுரியும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுமுறையில் செல்ல முடிவு செய்துள்ளார்கள்.
தமிழர்களின் கலாச்சார பண்பாட்டினை உணர்த்திடும் வகையில் பொங்கலன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை விடுமுறை விடப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் தபால் துறையில் பணிபுரியும் ஊழியர் சங்கங்கள் மத்திய அரசுக்கு 14-ந் தேதி பொங்கலன்று விடுமுறை விடுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் தமிழகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிராகரித்து உள்ளது. மத்திய அரசுத்துறையான தபால் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தமிழ் பண்டிகையான பொங்கல் தினம் மட்டும் தான் விடுமுறை ஆகும். அந்த விடுமுறையும் தற்போது மத்திய அரசு இல்லை என்று கூறி விட்டது.
எனவே மத்திய அரசின் இத்தகைய பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) பொங்கலன்று அனைத்து தபால்துறை ஊழியர்களும் ஒட்டுமொத்தமாக விடுமுறையில் செல்ல முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் தபால் துறையில் சுமார் 5 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
நகர் மற்றும் கிராமப்புற அஞ்சலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் விடுமுறையில் செல்வதால் பணிகள் பாதிக்கப்படும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தபால் துறை ஊழியர்கள் அதிர்ச்சியும், விரக்தியும் அடைந்துள்ளார்கள்.
பொங்கல் விடுமுறையை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து வருகிற 14-ந் தேதி பொங்கலன்று தமிழகத்தில் பணிபுரியும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுமுறையில் செல்ல முடிவு செய்துள்ளார்கள்.
தமிழர்களின் கலாச்சார பண்பாட்டினை உணர்த்திடும் வகையில் பொங்கலன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை விடுமுறை விடப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் தபால் துறையில் பணிபுரியும் ஊழியர் சங்கங்கள் மத்திய அரசுக்கு 14-ந் தேதி பொங்கலன்று விடுமுறை விடுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் தமிழகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிராகரித்து உள்ளது. மத்திய அரசுத்துறையான தபால் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தமிழ் பண்டிகையான பொங்கல் தினம் மட்டும் தான் விடுமுறை ஆகும். அந்த விடுமுறையும் தற்போது மத்திய அரசு இல்லை என்று கூறி விட்டது.
எனவே மத்திய அரசின் இத்தகைய பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) பொங்கலன்று அனைத்து தபால்துறை ஊழியர்களும் ஒட்டுமொத்தமாக விடுமுறையில் செல்ல முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் தபால் துறையில் சுமார் 5 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
நகர் மற்றும் கிராமப்புற அஞ்சலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் விடுமுறையில் செல்வதால் பணிகள் பாதிக்கப்படும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தபால் துறை ஊழியர்கள் அதிர்ச்சியும், விரக்தியும் அடைந்துள்ளார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X